Friday, August 17, 2018

தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன்




















தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.
பொருளடக்கம்

             1கல்வி
             2ஆசிரியப்பணிகள்
             3வானொலி
             4படைப்புகள்
o             4.1மொழியாக்கம்
o             4.2நாவல்கள்
o             4.3குறுநாவல்கள்
o             4.4பயண நூல்கள்
o             4.5சிறுகதைகள்
o             4.6கட்டுரை
o             4.7நாடகம்
             5மேற்கோள்கள்
             6வெளி இணைப்புகள்
கல்வி[தொகு]
இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி..வும் பயின்றவர்.
ஆசிரியப்பணிகள்[தொகு]
இவர்1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
வானொலி[தொகு]
இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றயவர்.
இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
படைப்புகள்[தொகு]
தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார்.
மொழியாக்கம்[தொகு]
             அன்னை (மூலம்: கிரேசியா டெலடா - நோபல் பரிசு பெற்றது)
நாவல்கள்[தொகு]
             மோகமுள் (1964)
             அமிர்தம் (1945),
             அம்மா வந்தாள் (1966)
             மரப்பசு (1975)
             நளபாகம் (1983)
             மலர்மஞ்சம் (1961)
             உயிர்த்தேன் (1967)
             அன்பே ஆரமுதே (1963)
             செம்பருத்தி (1968)
             அடி (1979)
குறுநாவல்கள்[தொகு]
             கமலம் (1963)
             தோடு'' (1963),
             அவலும் உமியும் (1963),
             சிவஞானம் (1964),
             நாலாவது சார் (1964),
             வீடு
பயண நூல்கள்[தொகு]
             "உதயசூரியன்" (1967)
             "கருங்கடலும் கலைக்கடலும் (1974)
சிறுகதைகள்[தொகு]
             பாயசம்
             பிடிகருணை
             மனிதாபிமானம்
             யாதும் ஊரே
             அக்பர் சாஸ்திரி*அடி
             சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
             சிலிர்ப்பு
             கடன் தீர்ந்தது
             சிவப்பு ரிக்ஷா
             சக்தி வைத்தியம்
             எருமைப் பொங்கல்
             ஒரு துளி துக்கம்
             கமலம்
             கொட்டுமேளம்
             சிவஞானம்
கட்டுரை[தொகு]
             உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
             அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
             கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
             நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)

நாடகம்[தொகு]
             "நாலுவேலி நிலம்" (1958)
             "வடிவேல் வாத்தியார் (1963),
             "டாக்டர் மருந்து"
மேற்கோள்கள்[தொகு]
             Jump up↑ மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
             தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர்
             நவீன இலக்கிய எழுத்தாளரும், சாகித்ய அகாடமி பரிசு வென்றவருமான தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
             # திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார். உமையாள்புரம் சாமிநாத ஐயர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயரிடம் இசை கற்றார்.
             # தஞ்சாவூரில் புனித பீட்டர் பள்ளி, சென்ட்ரல் பிரைமரி பள்ளி, கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். பல ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார். கல்லூரியில் படித்தபோது, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துகொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதினார்.
             # கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி, சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும், பின்னர் டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
             # தமிழ் இலக்கிய இதழானகணையாழிமாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது பயண அனுபவங்களைஉதயசூரியன்’, ‘கருங்கடலும் கலைக்கடலும்என்ற தலைப்புகளில் வார இதழ்களில் எழுதினார்.
             # 1964-ல் வெளியான இவரதுமோகமுள்நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. ‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘அம்மா வந்தாள்நாவல் ஆங்கிலம், குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
             # ‘கமலம்’, ‘தோடு’, ‘அவலும் உமியும்போன்ற குறு நாவல்கள், ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘கெட்டிமேளம்’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘பாயசம்’, ‘பிடிகருணை’, ‘மனிதாபிமானம்’, ‘சக்தி வைத்தியம்’, ‘யாதும் ஊரேஉள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேல் வாத்தியார்’, ‘டாக்டர் மருந்துஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.
             # இலக்கியம், இசை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமையல் கலை, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட.
             # தஞ்சை மாவட்டத்தின் பேச்சுவழக்கு, நையாண்டி ஆகியவற்றை தன் கதைகளில் செழுமையாகப் பதிவு செய்தவர். தஞ்சை மண்ணின் பண்பாடும், காவிரி ஆற்றின் அழகும் இவரது எழுத்தில் அற்புதமாக இழையோடுகின்றன. காவிரி பாயும் பகுதிகளில் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகளாக, எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்துநடந்தாய் வாழி காவேரிஎன்ற நூலை எழுதினார்.
             # கதைகளில் நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர். ‘சக்தி வைத்தியம்என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும். இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டார்.
             # தமிழ் இலக்கிய உலகின் தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளில் ஒருவரும்தி.ஜா.’ என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான தி.ஜானகிராமன் 1982-ம் ஆண்டு மறைந்தார்.
             தி. ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன்- 18
             என்னால் வருடங்களையெல்லாம், தேதி, மாதங்களையெல்லாம் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. அதுபற்றி அக்கறை இல்லாதவன். ஆனால் நிகழ்வுகள், சந்திப்புகள், சந்திப்புகளின்போது ஏற்படுகின்ற பேச்சுகள், முக மாற்றங்கள் பட்டையாய் மனதில் பதிந்திருக்கும்.
பதினைந்து வயதிலிருந்து பல கதைகள் படித்துக் கொண்டிருந்தாலும் நான் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே எழுத்தாளர் தி. ஜானகிராமன்தான்.
தி. ஜானகிராமன் சென்னையில் இல்லை. அவர் டெல்லியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அந்த எழுத்துக்களில் உள்ள வசீகரம் என்னை மிகவும் கவர்ந்தது. சொற்களின் கட்டமைப்பு, பாத்திரங்களின் குணம், அவர்கள் பேசும் மொழி இவையெல்லாம் எனக்கு நெருக்கமாக இருந்தன. பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இல்லாதவர்களாக இருந்தாலும் அந்த மொழியின் சப்தம் எனக்குப் பரிச்சயமானது. அது தஞ்சாவூர் பாஷை.
இஞ்ச வாப்பாஎன்பதை, இங்கே என்று சொல்வதைஇஞ்சஎன்று சொல்கின்ற மொழியின் நாதம், அந்த ஊருக்குத் தனியானது. ‘சபாஷ் அப்படிப் போடுஎன்றுபாவை அழுத்திச் சொல்லுகின்ற சொல்லை வேறு எந்த மாவட்டத்திலும் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு எந்த ஜாதி பேதமும் இல்லை. அத்தனை பேரும் இப்படித்தான் சொல்வார்கள். ‘சல மேல ரா ராகவாஎன்று எல்லாரும் பாடுவார்கள். இதிலும் ஜாதி பேதம் இல்லை. பாட்டுப் படிங்க என்று ஒருநாளும் சொல்ல மாட்டார்கள். பாட்டு என்பது பாடுவது என்று அந்த ஊர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனக்குத் தெரிந்த இந்த ஊரை இன்னும் விஸ்தாரமாக எனக்கு அறிமுகப்படுத்தியவர் தி. ஜானகிராமன். அதனாலேயே அவரை நான் சந்திக்க விரும்பினேன். மொழி சப்தம் மட்டும் எனக்கு மனதில் இருந்தது. ஆனால் ஜானகிராமன் விவரித்த காவேரிக் கரைக் காட்சிகள் மனதின் முகங்கள், நிற்றல், நடத்தல் எல்லாமும் மிகவும் கவர்ந்தன. வெட்கமின்றிச் சொல்ல வேண்டுமென்றால் அதைவிட என்னைக் கவர்ந்தது யமுனா. ஒருமுறையேனும் அந்த பொம்மனாட்டியைப் பார்த்துவிட வேண்டும். அல்லது அதுபோலச் சாயல் உள்ள பொம்மனாட்டியைப் பார்க்க வேண்டும் என்று சென்னையிலிருந்து நான் தஞ்சைக்குக் கிளம்பினேன்.


புதிதாய் தெரிந்த சோழதேசம்
எனக்கு பாபநாசத்தில் யாரும் கிடையாது. ஆனால், கும்பகோணத்திலிருந்து பஸ் பிடித்து பாபநாசத்தில் இறங்கித் தெருத் தெருவாகச் சுற்றினேன். வேறு பஸ் பிடித்து மூப்பனார் வீட்டு வாசலில் நின்றேன். போவோர் வருவோரை வியந்து பார்த்தேன். பொற்றாமரைக் குளத்தருகே உட்கார்ந்து செத்துப்போன பெண்ணுக்காகத் தியானம் செய்தேன். தியாகராஜ ஸ்வாமிகள் சமாதி பக்கத்திலுள்ள படித்துறையில் இறங்கிக் காவேரியைக் காதலோடு பார்த்தேன். இறங்கிக் குளித்தேன். இடுப்பளவு ஆழத்தில் நின்று முகத்தை அலம்பிக் கொண்டேன்.
பலமுறை குளித்த காவேரி. ஆனால் இப்பொழுது தி. ஜானகிராமனை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு குளிக்கும்போதும், கிராமம் கிராமமாக நடக்கும்போதும், மாடு, கன்றுகளைப் பார்க்கும்போதும், மனிதர்களை நோக்கும்போதும் உள்ளே புதிதாய் இன்னொரு சோழதேசம் தெரிந்தது.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஊரை எப்படிப் பார்க்க வேண்டும், மனிதர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புத்தியை, ரசனையை தி. ஜானகிராமன் எனக்குக் கொடுத்தார். இதனாலேயே என் பார்வை மாறுபட்டது. இந்தப் பார்வை மாறுபட்டதாலேயே நான் எழுத்தாளரானேன். என் எழுத்தில் மனிதர்களைப் படிக்கின்ற, ரசிக்கின்ற ஒரு தன்மை படிப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னளவில் நான் தி. ஜானகிராமன் விகசிப்போ என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய விரிவாக்கமோ என்ற எண்ணமும் எனக்கு வருகிறது. ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வதற்கு இங்கு மக்கள் உண்டு. அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.
நான் தி. ஜானகிராமன் வேரடியிலிருந்து மேலெழும்பினேன். இந்தத் தஞ்சை சாயல் கரிச்சான் குஞ்சுவிடம் உண்டு. ஆனால் மற்ற எழுத்தாளர்களிடம் என்னால் காணக் கிடைக்கவில்லை. ஒரு நல்ல விதை பெருமரமாகக் கிளம்பிப் பல விதைகளைத் தோற்றுவிப்பதுபோல ஒரு நல்ல எழுத்தாளன் பல எழுத்தாளர்களைத் தோற்றுவிக்கிறார். அவரும் மிகப் பெரிதாகச் சரித்திரத்தால் மறைக்கப்பட முடியாதபடி வளர்கிறார்.
ஜானகிராமனை நேரே சந்தித்தேன். நிறைய உளறிக் கொட்டினேன். என்னை வியப்போடு எந்தச் சிரிப்பும் இன்றி கண்களாலேயே துளைத்துவிடுவது போல அவர் பார்த்துக்கொண்டிருந்தார். சுப்ரமணிய ராஜூ அடக்கினான். நான் அதிகம் பேசியதற்கு மன்னிப்பு கேட்டேன். “இல்லை இல்லபொங்குற, நன்னாயிருக்கு”. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துக் கோர்த்ததுபோலப் பேச்சும் இருந்தது.
ஒரு எழுத்தாளன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. எழுதுவதுபோல் பேச, பேசுவதுபோல் எழுத என்பது இயல்பாக இருக்க வேண்டும்.
சின்ன உருவம். மென்மையான உடம்பு. மிதமான நடை. அவசரமில்லாத உடல் அசைவுகள். இலக்கியச் சிந்தனைக் கூட்டத்துக்குப் பலதும் பயமுறுத்தி அழைத்துக்கொண்டு போனோம். கேள்வி கேட்டுப் பிச்சிடுவானுங்க என்று சொன்னோம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது ஒரு மிக நல்ல கட்டுரையை அவர் அங்கு தந்தார்.
அந்தக் கட்டுரைக்குப் பிறகு யாரும் எழுந்து அவரை எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக இலக்கியச் சிந்தனையில் கூச்சலிடுபவர்கூட எழுந்து நின்று, “உங்கள் வயதுக்கும், எழுதிய எழுத்துக்கும் மதிப்பு அளித்து உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்என்று சொல்லி அமர, அவர் தொலைவில் இருந்து என்னை உற்றுப் பார்த்தார். “என்னமோ சொன்னியே, எப்படி நடக்கறது பார்த்தியாஎன்ற ஏளனம் அதில் இருந்தது. தி. ஜானகிராமன் கண்ணால் பேசுபவர்.
கடைசி யாத்திரையில்...
பெசன்ட் நகரில் உள்ள அவர் வீட்டில் என் மனைவியோடு சந்தித்திருக்கிறேன். ஜிப்பாவும், வேட்டியும் அணிந்து பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவர் வீட்டிற்கு அவர் இறந்த பிறகுதான் போனேன். வெளியே நின்று வாய்விட்டு அழுதேன். எல்லாரும் கொஞ்சம் வியப்பாகப் பார்த்தார்கள்.
சவண்டிகரணம் செய்கிறவர் மூங்கில் வாங்கணும், ஓலை வாங்கணும் என்று சொல்லி அங்கே காசு வாங்கிக்கொண்டார். கார் இருக்கா என்று கேட்டார். எல்லாத்தையும் எடுத்து வர்ரதுக்கு கார் இருந்தா சௌகரியம் என்று சொன்னார். நான் ஸ்கூட்டர் இருக்கிறது என்று சொன்னேன். என்னோடு ஸ்கூட்டரில் வந்தார். மூங்கில், ஓலைப்பாய், கயிறு, தேங்காய் நார், சட்டி, கரித்துண்டு என்று பலதும் வாங்கிக்கொண்டோம். தி. ஜானகிராமனின் கடைசி யாத்திரைக்காக என்னுடைய ஸ்கூட்டரில் அந்த ஓலைப் பாயும், மூங்கில் கட்டையும், தூக்குச் சட்டியும் பயணம் செய்தன.
என்னமோ அந்தச் செய்கை பெரிய கடன் தீர்த்தாற்போல இருந்தது. இப்பொழுது அதை நினைத்தாலும் நெஞ்சு கனத்து, நாக்கு குழறுகிறது. பெருமூச்சு வருகிறது. உறவுகள் செய்ய வேண்டியதை நான் செய்தேன்.
ஒரு எழுத்தாளன் உறவாக முடியுமா? முடியும். ஒரு நல்ல எழுத்தாளன் ஒரு நல்ல வாசகருக்கு ஒரு நெருங்கிய உறவு. அதைப் பிரிக்கவே முடியாது.

No comments:

Post a Comment