Thursday, December 16, 2021

ராகம் தேடும் பல்லவி

ராகம் தேடும் பல்லவி கிராமத்தில் சினிமா கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் இளைஞன் அவனுக்கு ஒரு காதலி சம்பாதியம் இல்லாததால் அவனை அவன் வீட்டாரே ஏளனமாக பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் அவன் காதலி வீட்டார்? இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்க ஒரு கட்டத்தில் ஊர் முழுவதும் இவர்கள் காதல் தெரியவருகிறது மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அவன் மனதில் எழும் கேள்வி இந்த நிமிடம் நம்மை நம்பி வந்தால் எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணம் அவனை அந்த ஊரில் இருந்து சென்னைக்கு போக வைக்கிறது அப்போதும் தன் காதலி நகையை கழட்டி உதவுகிறாள். 

 முதல் பாதி மிக கவிதையாக இருக்கும் இந்த படத்தில் தன் காதலியிடம் தான் எழுதிய கதையை கூறுவார் அது ஒரு குறும்படம் போல இருக்கும் காட்சியாகவே படத்தில் வரும் அட்டகாசமாக T.ரஜேந்தர் இயக்கி இருப்பார். படத்தில் வரும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் பாடல் அற்புதமான வரிகளை கொண்டது எனக்கு மிகவும் பிடித்த வரிகள். 

 ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ. செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது. அற்புதமான வரிகள் பல வெளிபடங்களுக்கு இசையமைத்து இருந்தால் பல அற்புதமான பாடல்கள் கிடைத்து இருக்கும். சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் நாயகன் சினிமாவிலும், காதலிலும் ஜெய்தாரா என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 https://www.youtube.com/watch?v=EKwOSd7vCYc

Tuesday, December 7, 2021

திங்கள் மாலை வெண் குடையான் -ILANGO ADIGAL K J YESUDOSS SALIL CHOUDHRY

திங்கள் மாலை வெண் குடையான்

 சென்னி செங்கோல் அது ஓச்சி 
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாய் வாழி காவேரி 
 கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி 
 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி உழவர் ஓதை மத கோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி

Ezhisai Geethame - HQ Digital Audio - ஏழிசை கீதமே - Rasigan Oru Rasigai

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 

வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே... 
 ஏதோ ராகம் எனது குரலின் வழி தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர கேட்கும் யாரும் உருகி உருகி விழ காதில் பாயும் புதிய கவிதை இது அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ... ஏனோ... 
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் உயிரே உயிரே... 
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே...
 கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான் நான் தான்...
 பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன் ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்... 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 


Poovannam Pola Nenjam - பூ வண்ணம் போல -சலீல் சௌத்திரி

Azhiyaatha Kolangal - Salil Chowdhury - ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்….. போல நெஞ்சே……..ஹே… ஏஹே… ஆண் : ஆ ஹாஹா… பெண் : ஆ ஹாஹா… பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை ஆண் : பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… ஆண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் பெண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : பிணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம் பெண் : இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும் ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பெண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் ஆண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஹே… ஏஹே… ஹே… ஏஹே… https://www.youtube.com/watch?v=WYowSWt_hj4

Kannan Varugindra Neram By Kum. Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)" https://www.youtube.com/watch?v=5jSRcf1cBD4