Thursday, December 16, 2021

ராகம் தேடும் பல்லவி

ராகம் தேடும் பல்லவி கிராமத்தில் சினிமா கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் இளைஞன் அவனுக்கு ஒரு காதலி சம்பாதியம் இல்லாததால் அவனை அவன் வீட்டாரே ஏளனமாக பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் அவன் காதலி வீட்டார்? இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்க ஒரு கட்டத்தில் ஊர் முழுவதும் இவர்கள் காதல் தெரியவருகிறது மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அவன் மனதில் எழும் கேள்வி இந்த நிமிடம் நம்மை நம்பி வந்தால் எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணம் அவனை அந்த ஊரில் இருந்து சென்னைக்கு போக வைக்கிறது அப்போதும் தன் காதலி நகையை கழட்டி உதவுகிறாள். 

 முதல் பாதி மிக கவிதையாக இருக்கும் இந்த படத்தில் தன் காதலியிடம் தான் எழுதிய கதையை கூறுவார் அது ஒரு குறும்படம் போல இருக்கும் காட்சியாகவே படத்தில் வரும் அட்டகாசமாக T.ரஜேந்தர் இயக்கி இருப்பார். படத்தில் வரும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் பாடல் அற்புதமான வரிகளை கொண்டது எனக்கு மிகவும் பிடித்த வரிகள். 

 ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ. செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது. அற்புதமான வரிகள் பல வெளிபடங்களுக்கு இசையமைத்து இருந்தால் பல அற்புதமான பாடல்கள் கிடைத்து இருக்கும். சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் நாயகன் சினிமாவிலும், காதலிலும் ஜெய்தாரா என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 https://www.youtube.com/watch?v=EKwOSd7vCYc

No comments:

Post a Comment