Monday, December 28, 2020

மதுரை சோமு

 இசை தெரியாத பாமர மக்களையும் அதன் ஆழ அகலங்களை அனுபவிக்க வைத்தவர் மதுரை சோமு என்கிற எஸ்.சோமசுந்தரம் (1919-1989). கச்சேரி மேடைகளைக் காட்டிலும் கோயில் திருவிழாக்களின் திறந்தவெளி அரங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர்.

நேரம், காலம் என்ற வரையறைகள் எதுவும் இன்றி மணிக்கணக்கில் பாடியவர். ஆறு மணி நேரம் வரைக்கும்கூட அவரது கச்சேரிகள் தொடர்வது உண்டு. அனைத்துவிதமான பக்க வாத்தியங்களையும் கொண்டு ‘ஃபுல் பெஞ்ச்’ கச்சேரிகளை நடத்தியவர். தெய்வம் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகய்யா’ பாடலின் மூலம் எல்லோர்க்கும் அறிமுகமானவர்.

தஞ்சை சுவாமிமலையில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் சோமசுந்தரம். அவரின் தந்தை சச்சிதானந்தம், அரசுப் பணியின் காரணமாக மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் சோமுவும் மதுரையிலேயே வளர்ந்தார். இளம் வயதில் குஸ்தி கற்றுக்கொண்டார். இசையில் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தாலும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டிருந்தது.

சுந்தரேசப் பட்டரிடம் இசை கற்றுக்கொண்ட அவர், பஜனைக் குழுக்களில் சேர்ந்து இடைவிடாத இசைப் பயிற்சி மேற்கொண்டு தனது குரல்வளத்தை மெருகேற்றிக்கொண்டார். அப்போது நாகஸ்வரம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். நாகஸ்வரத்துக்கேற்ற கம்பீரமான ராகங்களையும் அவர் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்றதற்கு அதுவும் ஒரு காரணம்.

சோமுவின் தாய்மாமா, அன்றைய சென்னை மாகாணத்தின் சித்தூரில் மாவட்ட துணை ஆட்சியராகப் பதவியில் இருந்தார். அவருடன் சோமுவும் சித்தூருக்குச் சென்றார். சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து இசை பயின்றார்.

சித்தூரில் தங்கியிருந்ததால் தெலுங்கிலும் நன்றாகப் பேசுவார் சோமு. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பொருளுணர்ந்து பாடுவார். ஆனாலும், தமிழிசை இயக்கத்தில் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர் மதுரை சோமு. கேரளத்துக்குச் சென்றால் ஸ்வாதி திருநாள் கீர்த்தனைகளைப் பாடுவார். கன்னடத்தில் புரந்தரதாசர் கீர்த்தனைகளையும் பாடுவார்.

ஹிந்துஸ்தானி இசை பாணியிலும் வல்லவராக இருந்தார் மதுரை சோமு. உஸ்தாத் படே குலாம் அலி கானின் மிகத் தீவிரமான ரசிகரான சோமு, ஒருமுறை மும்பையில் குலாம் அலிகான் முன்னிலையில் அவரது பாணியில் பாடி அவரிடமிருந்து பாராட்டு பெற்றிருக்கிறார். திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளையின் முன்னிலையில் தோடியில் பாடி பாராட்டு வாங்கியதைத் தன் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாக அவர் கருதினார்.

அபூர்வ ராகங்களில் பாடி முத்திரைகளைப் பதித்த சோமு, அபூர்வ ராகங்களில் சாகித்யங்களையும் இயற்றியிருக்கிறார். மேடைகளில் அவ்வப்போதைய சூழலுக்கேற்பத் திடுதிப்பென்று புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடும் ஆசுகவியாக விளங்கினார். ரசிகர்களிடமிருந்து வரும் பாடல்களையும் அவ்வாறே உடனடியாக மெட்டமைத்துப் பாடி அசத்துவார்.

ஒரே ஒரு சினிமா பாடல் மூலம் சாஸ்திரிய இசை அறியாதவர்க்கும் அறிமுகமானவர் மதுரை சோமு. முருக பக்தரான சின்னப்பத் தேவர் தயாரித்த ‘தெய்வம்’ படத்தில் சோமு பாடியது, கிருபானந்த வாரியார் சுவாமிகள் கேட்டுக்கொண்டார் என்பதற்காகத்தான். ஏற்கெனவே, ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்துக்காக நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறார் சோமு. ராவணன் வேடமேற்று நடித்த டி.கே.பகவதிக்காகப் பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் அவை.

ஆனால், திரைப்படப் பாடலுக்காகத் தான் பாடும் முறையை மாற்றிக்கொள்ள சோமு தயாராக இல்லை. எனவே, அந்தப் பாடல்கள் வேறொரு பாடகரைக் கொண்டு மீண்டும் பதிவுசெய்யப்பட்டு வெளிவந்தன. திரைப்படங்களுக்காகப் பாடுவதில்லை என்று சோமு முடிவெடுத்தது அப்போதுதான். தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தெய்வம்’ திரைப்படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பாடிய அவர், அதே நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர்-கணேஷ் இசையமைப்பில் ‘சஷ்டி விரதம்’ என்ற படத்துக்காக ‘துணைவன் வழித் துணைவன்’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகவும், தமிழக அரசின் அரசவை இசைப் புலவராகவும் விளங்கியவர். இசைப் பேரறிஞர், சங்கீத சக்ரவர்த்தி, அருள்ஞான தெய்வீக இசைக்கடல், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை திருச்சி செல்வேந்திரன் ‘மகா கலைஞன் மதுரை சோமு’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ஒரே நாளில் இரண்டு, மூன்று கச்சேரிகள். இடைவிடாத பயணம். ரயில் பயணங்களிலும் ரசிகர்கள் வேண்டுகோளுக்காகப் பாடுவது என்று அவரது வாழ்வே ஒரு மாபெரும் இசைப் பயணமாக அமைந்தது. இது அவருக்கு நூற்றாண்டு. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் அவரது குரல் தமிழுலகில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

*

என்னகவி பாடினாலும்

https://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE


ராகம்:-சிவரஞ்ஜனி தாளம்:- ஆதி

பல்லவி

என்ன கவி பாடினாலும் 

உந்தன் மனம் இரங்கவில்லை 

இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி)

அன்னையும் அறியவில்லை

தந்தையோ நினைப்பதில்லை 

மாமியோ பார்ப்பதில்லை

மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...) 

சரணம் 

அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை 

பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை 

இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை 

(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)


*




Friday, December 11, 2020

எம்பிரானின் கோயில் புக்கு

வணக்கம் ,

 எனது முதல் கவிதை தொகுப்பு "எம்பிரானின் கோயில் புக்கு" commonfolks இனணயதளத்தில் கிடைக்கிறது .

சிறப்பாக அச்சு பணி செய்த தமிழ் அலை பதிப்பகத்தாருக்கும் தோழர் இசாக் அவர்களுக்கும் நன்றி .

 

*

சத்தமாய் ஒரு

மௌனம்

மௌனமாய் ஒரு

சப்தம்.

 

*

பழத்தை விழுங்கிய பறவை

பறந்து கொண்டிருக்கிறது

ஒன்பது விருச்சங்களையும்

அதன் கிளைகளில்

அமர்ந்திருக்கும் பல

பறவைகளை சுமந்துக்கொண்டு .

*

யானை என்றபோது

பார்த்துக்கொண்டிருந்தது

பிரம்மாண்டம்.

அருகில் சென்று

கருணை என்றபோது

தும்பிக்கையால்

ஆசிசெய்து

சில்லரைப்பெற்று

பாகனிடம் தந்தபோது

அவன் வறுமை

யானையை தின்றிருந்தது.

*

உயரமான சுவர்களுக்குப்  பின்னால்

புழுதி படிந்த தென்னை மடல் மீது

குத்தி சரிந்தது

குவியலாய்

சூரிய கதிர்கள்.

தாகமாக இருக்கிறது

என்றேன்

ஓய்வு வேண்டுமா ?

என்றது சூரியன்

இன்னும் ஒரே ஒரு கோப்பை

தாகம் வேண்டும்

 


https://www.commonfolks.in/books/d/empiraanin-koyil-book

*

தோழமையுடன்

இரா.மணிவேல் .


Monday, December 7, 2020

P.susheela * கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து

 கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,

சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......
மதுரையிலே மதுரையிலே......
மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள் மீனாட்சி வந்தாள்
(அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)
தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
(அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

*
https://www.youtube.com/watch?v=w2S1qF52uOw
*

Thursday, December 3, 2020

எம். எம். தண்டபாணி தேசிகர்.

 எம். எம். தண்டபாணி தேசிகர்

*
இசையின் எல்லையை யார் கண்டார் என்று இயம்பிடுவாய் மனமே இனிமை தரும்
(இசையின்)
அசைவும் குழைவும் கொண்டு அமுதமென பொழிந்து
அளவிடர்கியலாத அமைவு பெற்றிலங்கும் நம்
(இசையின்)
காலம் கண்டறியாத இசையினை முதல்முதல் கருத்தினில் னினைத்தவர் எவர் தனோ அதன்
மூலம் முடிவு என்னும் முறையை அறிந்திட முயர்ச்சி செய்வோர்க்கெல்லாம் முதன்மையாய் திகழும்
(இசையின்)