Friday, May 9, 2025

kadaluku naan seiyum

இளையராஜாவின் கீதாஞ்சலி

கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம் அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி சங்கரன் உதித்தானே காலடியில் அவன் சகலமும் அறிந்தது உன் காலடியில் புவனங்கள் தழைப்பது உன் பூவடியில் என் புத்தியும் லயிப்பது உன் சேவடியில் ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதொரு சோதி என்றாகிய சுந்தரியே பூத கணங்களும் தேவ கணங்களும் ஓதி உணர்ந்திடும் பண்டரியே ஆய கலைகளும் வேத முறைகளும் பாத மலர் தொழும் சங்கரியே வாய் உள்ள வரையினில் வாழ்த்தி வணங்கிடும் தாய் உனை எந்தன் சந்ததியே சந்ததம் உனை பாடும் இச்சையம்மா அந்த இச்சையும் நீ கொடுத்த பிச்சையம்மா சிந்தையில் நிலைத்திருக்கும் பக்தியம்மா எனக்கும் பக்தியல்லால் ஏது சக்தியம்ம்மா கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம் அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி


No comments:

Post a Comment

Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை.. இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~ ஹ் ஏ சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் ...