Friday, May 9, 2025

யுத்தம்

ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க
இரண்டுபேர் போதும்
எதிரியாக மாறிய நண்பனும்
நண்பனாக மாறிய எதிரியும்.

ஒரு யுத்தத்தின் முடிவில்
ஐந்து பேர் எஞ்சுவார்கள்
இறந்தவன் ஒருவன்
சுமப்பவர் நால்வர்

ஒரு யுத்தம் 
புதிய சாதிகளை உருவாக்குகிறது
அங்கவீனர்கள்
அநாதைகள்
கைம்பெண்கள்
தரித்திரர்கள்

கூடவே
மூடர்களை
கல்நெஞ்சர்களை.

- கவிஞர் சுகுமாரன்

No comments:

Post a Comment

புத்தகம் படிப்பது ....

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது,எப்படி படிப்பது,ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன, சி...