Monday, July 25, 2022

Yaar Thoorigai Thantha /யார் தூரிகை தந்த ஓவியம்

 பெ: ம்ம்..ம்ம்.. நனனன நானா..

நனன நனன நனன நனநா ..
நனன நனன நனநா ..


திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB & உமா ரமணன்

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்...
கோலமிடும் மேகங்களே ஆஹா

ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா…



பெ: கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆ: ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே..
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்..


ஆ: சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
பெ: அலையென ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்

ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்..ம் ..
கோலமிடும் மேகங்களே ஹா..ஹா

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

No comments:

Post a Comment