Friday, April 23, 2021

டி. என். ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார்.

 நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ராஜரத்தினம் பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 

திருமருகல் நடேசபிள்ளை நாதசுவரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார் பதினேழாவது திருவாவடுதுறை ஆதீனம் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ‘ஆதீன வித்வான்’ ஆக்கினார்.

 ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார். பின்னர், எட்டு வயதில் கோனேரிராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதையரிடம் பயின்றார். 

ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார். முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார்.

 ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.

 இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜி. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார். • ஏ. வி. எம் செட்டியார் பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற 'தோடி' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். 

அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது. •

 1955 ஜனவரி 21-இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை •

1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற போது வானொலியில் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது.

 • நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார். • நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார். 

 l சித்தப்பா கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக்காவல் கிருஷ்ண அய்யர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், கண்ணுச்சாமி பிள்ளை ஆகியோரிடமும் நாகஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். நாகஸ்வர இசையில் நிபுணத்துவம் பெற்றார். ஆரம்ப நாட்களில் திருவாடுதுறை கோயிலில் வாசித்து வந்தார். 

l பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன. 

l வழக்கமான நாகஸ்வர இசைக் கலைஞர்கள் போல் உடை அணியா மல், கோட், ஷெர்வாணி அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொள்வார். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் மோதிரங்கள், மணிக்கட்டில் ஒரு பெரிய தங்க கடா போன்ற சங்கிலி இவற்றோடு அலங்காரமாக பவனி வந்தார். l ‘நாகஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டு மல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். கப்பல் போன்ற காரில்தான் பயணம் செய்வார். சுயமரியாதை கொண்டவர்.

 l சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ‘மிஸ் கமலா,’ ‘கவி காளமேகம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

l ‘சங்கீத அகாடமி விருது’ ‘அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது. அந்த விழாவுக்கு இவர் ஒரு சமஸ்தான அதிபர் போல ஆடை அணிந்து சென்றிருந்தார்.

 l அவரைப் பார்த்த நேருவே ஆச்சரியமடைந்து, அவரிடம் ‘இங்கே வந்திருக்கும் சமஸ்தான அதிபர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்’ என்று கூறினாராம். காஞ்சி பரமாச்சாரியரிடம் பக்தி கொண்டவர். ஒருமுறை மாயவரம் சென்று கொண்டிருந்தபோது தொலைவில் சுவாமிகள் பட்டனப் பிரவேசம் வருவதை அறிந்தார். உடனே காரிலிருந்து இறங்கி தெருவோரத்தில் நின்றுகொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கினார்.

 l இசை ஒலித்ததைக் கேட்டவுடனேயே பரமாச்சாரியார் ‘ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே’ என்று கூறி அங்கே போகுமாறு பல்லக்குத் தூக்கிகளிடம் உத்தரவிட்டார். ஒன்றரை மணி நேரம் இவர் வாசிக்க, மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது. பரமாச்சார்யார் மெய்மறந்து கேட்டு ரசித்துவிட்டு, அவருக்கு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு ‘இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாராம்.

 l ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத் தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடுஇணையற்ற நாகஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார். நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருவாவடுதுறையில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்ரமணியம். நாதசுவர வித்துவான் திருமருகல் நடேசபிள்ளையின் வளர்ப்பு மகன் அவர். நடேசபிள்ளைதான் இவரின் பெயரை ராஜரத்தினம் என்று மாற்றி வைத்தார் திருமருகல் நடேசன் ராஜரத்தினம் எனபதை சுருக்கி டி.என்.ராஜரத்தினம் என்று அழைக்கப்படுகிறார். இளம்வயது இவரது ஒன்பதாவது வயதில் பாடகராக நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது தொண்டை புண்ணானதால், ஆதினம் இவரை நாதசுரம் கற்கச் சொன்னார். முதலில் மடத்து நாதசுரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும், கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். தனி பாணியில் வாசித்த பூபாள ராகம் தொடக்கத்தில் திருவாடுதுறை மடத்தின் காலை பூஜையில் வாசிக்க ஆதினம் இவருக்கு அனுமதி அளித்தார்.

 திருமாளிகை தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார். கர்நாடக இசை கொடிகட்டி பறந்த ஒரு காலக்கட்டத்தில், தமிழிசைகளுக்கு இடம் இல்லாவிட்டால் அந்த மேடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னவர். பொன்னாடை போர்த்தியபடி நாதசுரம் வாசித்த முதல் கலைஞர் பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். 

இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். காரைக்குடியில் நாதசுரம் வாசிக்க செல்கையில், தோளில் துண்டை போட்டுக்கொண்டு நாதசுரம் வாசிக்கையில் தங்களுக்கு மரியாதை குறைவு என்று எண்ணி, துண்டை எடுக்கச்சொன்னார்கள். எடுக்க மாட்டேன் என்று மறுத்தவர் ராஜரத்தினம் பிள்ளை. அவர் எடுக்காதது மட்டுமல்ல, எந்த நாதசுரக் கலைஞரையும் தவில் வித்வான்களையும் தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டக்கூடாது என்றும், அது சுயமரியாதைக்கு இழிவு என்றும், அதை தோளில் இருந்து இறக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், எவனோ சொல்கிறான் என்பதற்காக எடுக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர் ராஜரத்தினம் பிள்ளை. நாதசுரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார். 

 தந்தை பெரியார் மீதும் அவரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீதும் பெரும் மரியாதை கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னின்று நடத்திய திராவிட இசை விழாவிலும் இவரது நாதசுரம் பாடியது. இந்தியா விடுதலை பெற்ற போது டெல்லியில் ஒலித்த நாதசுரம் 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றபோது, டெல்லியில் நேரு முன்னிலையில் இவர் நாதசுரம் வாசித்தார். அதேநேரம் வானொலியிலும் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது
 குறிப்பிடத்தக்கது. 

நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள் நாதசுரம் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை 18.25 அங்குல நீளம் உடையதாகவும் நாலரைக் கட்டைச் சுருதியுடனும் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை. இதில் ஏழு விரல் துவாரங்களும் ஒரு பிரம்ம சுரமும் தவிர கூடுதலாக இரண்டு இணை ஜீவசுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909-ம் ஆண்டு மன்னார்குடி சின்னப்ப பக்கிரி நாகசுரக்காரர் 21.50 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார். 1920-ம் ஆண்டு திருப்பாம்பரம் சாமிநாத பிள்ளை 23.75 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932-ம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாதசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாலரை, நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு ‘திமிரி நாதசுரம்’ என்று பெயர். 1932-ம் ஆண்டு திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை 31.25 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பல மேற்கொண்டு 1914-ம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாதசுரத்தை உருவாக்கினார். 

அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக் கொண்டு 1946-ம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு ‘பாரி நாகசுரங்கள்’ என்று பெயர். இவ்வாறு வரலாற்று நோக்கில் நாகசுரம் பற்றிய சில வளர்ச்சிப் படிநிலைகளை மரபிசைச் சுரங்கம் என்ற கட்டுரையில் இசை ஆய்வாளர் பேரா.பக்கிரிசாமி பாரதி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ராஜரத்தினம் பிள்ளை நாதசுரக் கருவி உருவாக்கத்தில் எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது. கலை மீது பெருமரியாதை கொண்டவர் நாதசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார். தன் கலை மீது அவ்வளவு மரியாதை கொண்டவர். டி.என்.ஆர். 1956-ம் ஆண்டில் டிசம்பர் 12-ம் நாள் மாரடைப்பால் காலமானார். 

No comments:

Post a Comment